Saturday, October 30, 2010

தீபாவளி அலங்கார தட்டு

தேவையானவை

பளாஸ்டிக்,தெர்மகோல்,எவர்சில்வர் எதாவது ஒரு தட்டு
கலர் டிஷ்யூ பேப்பர் அல்லது வெல்வட் துணி அல்லது பேப்பர்
க்ளூ
பழைய சிடி
விளக்கு ( அகல்விளக்கு, மெழுகுதிரி, சந்தன கிண்ணம்,குங்கும சிமிழ்) ஏதுவானலும் ஒன்று
கத்தரிகோல
அலங்கார மணிகள், அல்லது சமிக்கி,குந்தன், முத்து

செய்முறை

தட்டை டிஷ்யூ பேப்பரில் வைத்து வட்டமாக வெட்டி எடுக்கவும்.
துணியிலானும் சரி எதுவானலும் அந்த அளவில் வெட்டி வைக்கவும்.
தட்டில் பசை நல்ல தடவி வெட்டிய துணி அல்லது டிஷ்யூவை ஒட்டி காயவிடவும்
அதில் நடுவில் சிடியின் பின்புறம் பசை தடவி ஒட்டி காயவிடவும்.
சிடியின் நடுவில் மேல் பாகத்தில் ஒட்டை இருக்கும் இடத்தில் அதில் விளக்கு, அல்லது மெழுகுதிரி,கிண்ணம், அல்லது குங்குமசிமிழ் எது வேண்டுமானலும் வைத்து காயவிடவும்.
காய்ந்ததும் அதில் நம் கற்பனைகேற்ப்ப மணிகள்,குந்தன் கற்கள்,
முத்துகள் ஒட்டி நன்றாக காய்விடவும்.
விருந்தினர்களுக்கு பரிசாகவும், நம் வீட்டு பண்டிகைகளுக்கு உபயோகிக்கவும் செய்யலாம்.
பார்க்க நன்றாக பளிச் என்று மின்னும் அலங்காரத் தட்டு ரெடி.

Thursday, October 28, 2010

பீன்ஸ்&ப்ளம்ஸ்



எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் விளைந்த பீன்ஸ் & ப்ளம்ஸ்

Saturday, October 16, 2010

நவராத்திரி






இந்த வருட நவராத்திரி எங்க வீட்டு கொலு.
என் சின்ன மகள் பார்க் செய்தாள்.
இன்று ஒன்பதாம் நாளாகிய சரஸ்வதி, ஆயூத பூஜை செய்வது வழக்கம்.
காலையில் குளித்து தேவிக்கு சர்க்கரை பொங்கல், கொண்டகடலை சுண்டல், வடை, பாயசம் செய்து எல்லா புத்தகஙகளும், ஆயூதங்கள்,சங்கித வாத்தியங்கள், கார், போன்ற எல்லாவற்றுக்கும் குங்குமம்,மஞ்சள் இட்டு பூக்கள்,அட்சதை போட்டு நிவேதனம் செய்து வருகிறவர்களுக்கும் அந்த ப்ரசாததை கொடுத்ப்பது வழக்கம்.
விஜயதசமி நாளாகிய நாளை குளித்து பூக்கள் அட்சதை போட்டு பூஜையில் வைத்திருக்கும் புஸதகத்தை எடுத்து ஒரிரண்டு வரிகள் படித்து, பாட்டு பாடி
பாயசம், பழம் போன்றவை வைத்து நிவேதனம் செய்து, கொலுவுக்கும், மங்கல ஆரத்தி எடுத்து ஒரிரண்டு பொம்மைகளை படுக்க வைப்பது வழக்கம்.
பின் அதை எடுத்து உள்ளே வைத்து அடுத்த முறை எடுத்து இதே போல் கொண்டாடுவது வழக்கம்.

Wednesday, October 13, 2010

சிலி தாமிர சுரங்க மீட்பு




ஆகஸ்ட் 5 தாமிர கனிமச் சுரங்கம் 700 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது சுரங்கம் மண்,பாறை,கல் போன்றவர்றால் மூடிகொண்டது.

சுரங்கத்தில் சிக்கி கொண்டு க்டந்த 69 நாட்களாக மண்னுக்குள் புதையுண்டு இருந்த 33 பேரை சிலி நாடு அரசு நல்ல விதமாக 33 பேரையும் மீட்டனர்.


சுரங்கத்தில் இருந்த 33 பேர்களுக்கு அவரவர் சொந்தகளின் அன்பு கடிதங்கள், மருந்துகள்,
குடிநீர், திரவ உணவு போன்றவற்றை அனுப்பி அவர்களை காப்பாற்றி கொண்டும் மனதுக்கு
தெம்பும், உற்சாகமும் அளித்து கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒருவர் தலைவராக நியமித்து அவர சொல்வதை கேட்டு ஒற்றுமையாக நடந்து கொண்டார்கள்.2 பேரின் உணவை 17 நாடகள் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

சிலி நாட்டு அரசு இதை வெற்றிகரமாக நடத்த்தினார்.
செபாஸ்டின் பினேரா சீலி நாட்டு தலைவர் இதை நல்ல வெற்றிகரமாக் எல்லோரையும் மீட்டு
அந் நாடு ஒரு ரிக்கார்டை பதிப்பித்தது.
இந்த ஒரு எலிவேட்டர் (Capusule) நீளமான காஜ் செய்து அதை
பத்திரமாக கீழே இற்க்கி முதலில் ஒரு டாக்டர்ரை அனுப்பி பரிசோதனைகள் நடத்தி பின் ஒவ்வொருத்தராக கீழே இருந்து மேலே ஏற்றி வந்தது.

சிலி நாடு வெற்றிகரமாக எல்லா சுரங்க தொழிலாரர்களையும் மீட்டனர்.
அவரவர் சொந்தகாரகளை பார்த்து ஆனந்த கண்ணிரும் தழுவலுமாக கண்னுக்கும், மனதுக்கும்
சந்தோஷமாக இருந்தது.
33 பேரும் வந்ததும் அந்நாட்டு தேசிய கீதம் பாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதை உலகம் முழுதும் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

Monday, October 11, 2010

தேவதையில் விஜிஸ் க்ரியேஷன்ஸ்


தேவதை இதழில்
இந்த மாத தேவதை இதழில் என் வலைதளம் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செதியை தெரிவித்து கொள்கிறேன்.

தேவதை இதழை நான் விடாமல் படித்து வருகிறேன். இந்தியாவில் இருந்து என் சிஸ்டர் தொடர்ந்து இதுவும், மங்கையர் மலரும் அனுப்புவிடுவாங்க.நானும் இதுவரைக்கும் விடாமல் விரும்பி படிக்கும் இதழ்கள்.


தேவைதை ஒரு நல்ல இதழ் என்பதை நான் சொல்லி தெரிவதை விட உங்க எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எல்லா இல்லதரசிகளுக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு நல்ல பயனுள்ள மாதமிருமுறை இதழாக மலருகிறது. நல்ல பயனுள்ல தகவல்கள், செய்திகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த தேவதை.
இதில் வெளியிட்ட் திரு நவநீதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதில் என்னுடைய்ய வலைதலமும் வந்துள்ளது என்று கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிங்க எல்லாரும் பார்த்து படித்துவிட்டு சொல்லுங்க. என் தோழி விஜி க்ராப்ட்ஸ் விஜி அவரகள் சொன்னாங்க. அவர்களுக்கும் என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.





Friday, October 8, 2010

Happy Birthday





இன்று என் மகள் அக்‌ஷ்யாவின் 10 வது பிறந்தநாள்.

எல்லோரையும் என் மகளும் நாங்களும் பார்டிக்கு வாங்க என்று அன்புடன் அழைக்கிறோம்.
கேக்+பார்டி.
என் மகள் இப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் காலங்கள் வேகமாக போய்விட்டது போல் தோன்றுகிறது.
அவளுக்கு என் சின்ன பென் திவ்யாவும் நானும் சேர்ந்து ஒரு கார்ட் செய்து பரிசளித்தோம்.
இதோ அது தான் இது.
உங்க எல்லோருடைய்ய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எப்பவும் என் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நானும் என் மகளும் உங்க எல்லோருக்கும் மனமாற நன்றி கூறி கொள்கிறோம்.









Tuesday, October 5, 2010

வீட்டிலேயே லைப்ரரரி







வீட்டிலேயே லைப்ரரி
புஸ்தகங்கள் நிறய்ய படிப்பவர்களுக்கும், வீட்டில் நிறய்ய புஸ்தகங்கள் இருந்தும் அதை அவசரத்திற்க்கு எடுப்பதற்க்கு அவதிபடுகிறவர்களுக்கும் இதோ இதே போல் இருந்தால் நாம் எடுப்பதற்க்கும், நம் அவசரத்திற்க்கு உடனே தீர்வு கிடைத்திடும்,

சிலர் வீட்டில் புத்தகங்கள் நிறய்ய வைத்திருப்பார்கள்.
அதை அழகாக லேபல், கூடை, ட்ரே போன்றவற்றில்
அடுக்கி வைக்கலாம்.
நிங்களும் இதே போல் செய்தால் புத்தகங்கள் அங்கும் இங்குமாக
கிடக்காமல் எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில் இருக்கவும் செய்யும்.
அவரவர் வசதிகேற்ப்ப ஒரு அலமாரி, ஷெல்ப், ப்ளாஸ்டிக், மரம்
ஏதுவானலும்அதில் சின்ன ப்ளாஸ்டிக் ட்ரே அல்லது கூடை,
இதில் ஏதாவது ஒன்றை விருப்பதிற்க்கும்,வசதிக்கும் தகுந்தாற்போல் வாங்கி அதில் மார்க்கர், அல்லது பேனாவினாலோ வேண்டிய தலைப்புகள், முடிந்தால் சில புத்தகங்கள் தொடர் புத்தகங்களாக இருக்கும் இருந்தால் அதன் வரிசை படி 1 முதல் 8 வரை என்று எழுதி அதன் படி அடுக்கி வைத்தால் பார்க்கவும், படிக்கவும் வசதியாகவும் இருக்கும்.

குழந்தைகள் புத்தகங்கள்,

ஸ்கூல் ஹோம் வொர்க் புத்தகங்கள்

பெரியவர்கள் படிக்கும் புத்தகங்கள்

வாரா,மாத இதழ்கள்,

இப்படி அவரவர் வீட்டில் இருக்கும் புத்தகங்களை ஒழுங்கு முறையில் அடுக்கினால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.
இடம் இருந்தால் அந்த இடத்திலேயே உட்கார்ந்து படிக்க ஒரு சின்ன சேர்
இருந்தால் எடுத்து படித்து அங்கே மறக்காமல் எடுத்த இடத்திலே திரும்ப வைக்கவேண்டும் ( அது தான் இதில் கவனிக்க வேண்டியது) மாற்றி வைக்ககூடாது.

முடிந்தால் நிங்க படித்து முடித்த உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை லைப்ரரரிலே குடுக்கலாம் அல்லது பள்ளியில் கூட கேட்டு குடுக்கலாம்.மற்றவர்களும் அதை பயன்படுத்துவார்கள்.
இந்த முறை எல்லோருக்கும் பயன்படும்.

Sunday, October 3, 2010

க்யூபெக்கில் காந்திசிலை ( Gandhi Statue in Quebec)





கனடாவில் காந்தி சிலை
நம்ம காந்தி அவர்கள் எங்கும் இருப்பார் என்பது உறுதி எல்லாருக்கும்
தெரிந்து இருந்தாலும்,இந்த காந்தி ஜெயந்தி தினத்திற்க்கு நான் குறிப்பிட பெருமை படுகிறேன்.
நான் பார்த்ததை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்க தோன்றியது.
இதோ கனடாவில் பார்த்தது.

இந்த சிலையை நாங்கள் கனடாவில் க்யூபெக் சிட்டி பார்லெமெண்ட் வளாகத்தில்
பெரிய தேச தலைவர்கள் சிலைகளை எல்லாம் பார்க்க முடிந்தது.
ஆனல் நம்ம காந்தி அவர்களின் சிலை நல்ல அழகான புத்தம் புது
தோற்றத்துடன் பார்க்க நன்றாக இருந்தது.
இந்த சிலையில் முன்ப ஆங்கிலத்திலும் பின்பு
ஹிந்தியிலும் முழு பெயர்,தோற்றம் மறைவு
எல்லாம் இரண்டு மொழிகளிலும் பொரிக்கபட்டிருந்தது.
இந்த சிலையின் முன் எங்கள் குடும்ப புகைபடம் ஒன்றும் எடுத்து கொண்டோம்.
என் குழந்தைகளுக்கு விளக்கி சொல்லி கொடுத்தோம்.
நம்ம அறியாமலே அந்த சிலையை பார்த்ததும் ஒரு கணம் நம் கால்கள்,கண்கள் எல்லாம் அப்படியே நின்று நம் தாய் நாட்டிற்க்கே போனது போல் ஒரு நிம்மதியுடன் நின்று பார்வையிட்டோம்.
இதோ நிங்களும் பார்க்கலாம்,
நான் உங்க எல்லோரையும் க்யூபெக் நகரத்திற்க்கு கூட்டிகொண்டு போகவில்லை என்ற கவலை வேண்டாம்.

மீண்டும் நிறய்ய க்யூபெக் படங்களோட அந்த நாட்டு கலாசரம்,உணவு எல்லாவற்றையும் நான் அடுத்த பதிவில் உங்களை ச்ந்திக்கிறேன்.
அதுவரைக்கும் இத படியுங்க, சொல்லுங்க.